Posts

Showing posts from July, 2018

வீட்டுக்குள் ஓர் அரிசி ஆலை... 45 நிமிடத்தில் 100 கிலோ அரைக்கலாம்!

Image
ஒ ரு காலத்தில் வீட்டுக்கு வீடு உரல், உலக்கை இருக்கும். நெல்லை வேகவைத்தோ பச்சையாகவோ உரலில் இட்டுக் குத்தி, புடைத்துத் தேவையான அரிசியை எடுத்துவைத்துக் கொள்வார்கள். தற்போது நவீன அரிசி ஆலைகள் வந்தபிறகு, உரல் உலக்கைகள் காணாமல் போய்விட்டன. பெரும்பாலான விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் நெல்லை மொத்தமாக விற்பனை செய்துவிட்டு வீட்டுத் தேவைக்கு, அரிசி வாங்கிதான் சமைக்கிறார்கள். குறைந்த அளவு நெல்லை ஆலைக்கு எடுத்துச்சென்று அரைத்து வருவதில் உள்ள சிரமங்களை மனதில் வைத்துதான், அரிசியை விலைக்கு வாங்குகிறார்கள். இப்படிப்பட்ட விவசாயிகள் பலருக்கு ‘நாம் விளைவித்த நெல்லை நம்மால் சாப்பிட முடியவில்லையே’ என்ற ஆதங்கம் இருக்கும். அப்படிப்பட்டவர்களின் ஆசையைத் தீர்க்கும் விதமாக ஒரு சிறிய நெல் அரைக்கும் இயந்திரத்தைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளனர், சென்னையைச் சேர்ந்த ‘நல்லகீரை’ அமைப்பினர். வீட்டு மின்சாரத்திலேயே, இந்த இயந்திரத்தை இயக்க முடியுமென்பதால் இதற்கு வரவேற்பு பெருகி வருகிறது.   இது தொடர்பாக நல்லகீரை அமைப்பைச் சேர்ந்த ஜெகனிடம் பேசினோம். “பசுமை விகடன்தான் எங்களை வெளியுலகத்துக்கு அறிமுக...

அற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு!

Image
160 ஆடுகள்... ஆண்டுக்கு ரூ 17 லட்சம்... கால்நடை துரை.நாகராஜன் - படங்கள்: கா.முரளி ‘அ ஞ்சாறு ஆட்டை வாங்கி மேய்ச்சுக்கிட்டுருந்தாப் போதும்.. காலாட்டிகிட்டுச் சம்பாதிக்கலாம், யார்கிட்டயும் கைகட்டி நிக்க வேண்டியதில்லை’ என்று கிராமங்களில் சொல்வார்கள். அந்தக் கூற்றை உண்மை என நிரூபித்து வருகிறார், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி, ஜெயகுமார்.  திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் இருக்கிறது ஜெயகுமாரின் பண்ணை. ஒரு பகல்பொழுதில், பண்ணையில் இருந்த ஜெயகுமாரைச் சந்தித்தோம்.  “போளூர்தான் சொந்த ஊர். இது அப்பா வாங்கின நிலம். கிணத்துப்பாசனத்தோடு மொத்தம் 13 ஏக்கர் இருக்கு. 1993-ம் வருஷம் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு வேலைக்குப் போனேன். தொடர்ந்து வேலைக்குப் போயிட்டுருந்தது சலிப்பா இருந்துச்சு. அப்படியும் 15 வருஷம் ஓட்டிட்டேன். ஒரு கட்டத்துல சுத்தமா பிடிக்காமப் போகவும் வேலையை விட்டுட்டு விவசாயம் பாக்கலாம்னு வந்துட்டேன். 2008-ம் வருஷம், விவசாயத்தை ஆரம்பிச்சேன். ஆரம்பிச்ச சமயத்துல பல வகைகள்ல நஷ்டம். அதனால, விவசாயத்தை மட்டும் நம்பக்கூடாதுனு முடிவு பண்ணி, ஆடு வளர்ப்பை ஆரம்பிச...